Saturday, 26 May 2018

*செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921) பிரபு பற்றிய சில தகவல்கள்:-*

🍂 ஆகஸ்ட் பிரகடனம் 1917, இதன்படி இந்தியர்களுக்கு படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
🍂 இந்திய அரசாங்கம் சட்டம் - 1919, (மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம்) நிறைவேற்றப்பட்டது.
🍂 இந்திய பிரதிநிதி செம்ஸ்போர்டு
🍂 இங்கிலாந்தில் இந்திய அரசுக்கான பிரதிநிதி மாண்டேகு
🍂 இச் சட்டத்தின் மூலம் கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஆங்கிலேய இந்தியர்கள் தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍂 ரௌலட் சட்டம் - 1919
🍂 ஜாலியன் வாலாபாக் படுகொலை 13 ஏப்ரல் 1919 நடைபெற்றது.
🍂 1919 ல் காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.
🍂 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை விசாரணைக்காக 'ஹன்டர் குழு' அமைக்கப்பட்டது.

*இரண்டாம் ஹார்டிஞ்ச் பிரபு (1910 - 1916) பற்றிய சில தகவல்கள்:-*

🌻வங்க பிரிவினை ரத்து செய்யப்பட்டது - 1911
🌻 கல்கத்தா வில் இருந்து டெல்லி இந்தியாவின் தலைநகரானது - 1911
🌻 காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து  9 ஜனவரி 1915 இந்தியா திரும்பினார்.
🌻 அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கம் தொடங்க போவதாக அறிவித்தார்.
🌻 23 டிசம்பர் 1912 இவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டு அதில் இருந்து தப்பிவிட்டார்.
🌻 இவருக்கு டெல்லியில் நுழையும் போது சாந்தினி சவுக் அருகில் குண்டு வீசப்பட்டது.

*மின்டோ பிரபு (1905 - 1910) பற்றிய சில தகவல்கள்:-*

🍄 1905 வங்கப் பிரிவின் காரணமாக சுதேசி இயக்கம் ஏற்பட்டது.
🍄 அரசியலில் அமைதி நிலை நிலவியது.
🍄 1906 முஸ்லிம் லீக்  தோற்றம்.
🍄 1907 சூரத் பிரவு ஏற்படுத்தப்பட்டது.
🍄 புரட்சிகளை ஒடுக்க பல சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது.
🍄 லாலா லஜபதிராய் மற்றும் அஜித் சிங் (மே 1907) பாலகங்காதர திலகர் (ஜூலை  1908) ஆகியோர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
🍄 1909 மின்டோ - மார்லி சீர்திருத்தம்
🍄 இச்சட்டத்தின் முடிவில் முஸ்லீம்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍄 மின்டோ - மார்லி சீர்திருத்தில் மின்டோ இந்திய அரசு பிரதிநிதி
🍄 மார்லி என்பவர் இந்திய அரசுக்கான ஆங்கில பிரதிநிதி.

*லிட்டன் பிரபு (1876 - 1880) பற்றிய சில தகவல்கள்:-*

🌼 இவர் தலைகீழ் எண்ணமுடைய வைசிராய் ( Viceroy of Reverse Character) எனப்படுகிறார்.
🌼 இங்கிலாந்து ராணி விக்டோரியா விற்கு கெய்சர்-இ-ஹிந்த் (Kaiser-i-Hind) பட்டம் வழங்க 1877 ல் டெல்லி தர்பாரை நடத்தியவர்.
🌼 1878 படைக்கல சட்டம் என்ற ஆயுதச் சட்டம் (Arms Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1878 வட்டார மொழி பத்திரிகை சட்டம் (Vernacular Press Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1876 - 1878 இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
🌼 1878 - 1880 ல் பஞ்ச நிவாரண குழு சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் அமைக்கப்பட்டது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் (1878 - 1880) இவர் காலத்தில் நடைபெற்றது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - காண்டமக்
🌼 காபூலுக்கு வந்த தூதர் மற்றும் அதிகாரிகளை ஆப்கானியர்கள் படுகொலை செய்தனர். இதற்கு லிட்டன் பிரபு பொறுப்பு என அவரை 1880 பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
🌼 இந்தியாவின் 'நிரோ மன்னர்' என்று அழைக்கப்பட்டார்.
🌼 நிரோ மன்னர் என அழைக்க காரணம் ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் போது அந்த நாட்டு மன்னர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் அதே போல் இந்திய பஞ்சத்தில் இருந்த போது டில்லி தர்பார் நடத்தினார்.

*கர்சன் பிரபு (1899 - 1905) பற்றிய சில தகவல்கள் :-*

🌺 இவர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்:
1. இந்திய பல்கலைக்கழக சட்டம் - 1904
2. காவல் துறை சீர்திருத்தம்
3. கல்கத்தா மாநகராட்சி சட்டம் - 1899
4. தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் - 1904
5. வங்க பிரிவினை - 1905
🌺 1902 தாமஸ் ராலே கல்விகுழு பரிந்துரை படி 1904 ல் இந்திய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டது.
🌺 சர் ஆண்ரூ பிரேசர் தலைமையில் போலீஸ் கமிட்டி அமைக்கப்பட்டது.
🌺 இராணுவத்தை சீரமைக்க 'கிச்னர் பிரபு' பொறுப்பில் விடப்பட்டது.
🌺 1899 கல்கத்தா மாநகராட்சி சட்டம் இயற்றப்பட்டது. அதிகாரிகள் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
🌺 1904 புராதான சின்னம் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
🌺 தொல்பொருள் இலாகா ( Archeological Survey of Indian) அமைக்கப்பட்டது.
🌺 1902 ல் தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரலாக சர்.ஜான் மார்ஷல் நியமிக்கப்பட்டார்.
🌺 1899 காதித நாணயச் சட்டம் (Indian Coinage and Paper Currency Act) இயற்றப்பட்டது.
🌺 வங்கப் பிரிவினை  16 அக்டோபர் 1905.
1. வங்காளம் தலைநகர் - கல்கத்தா
2. கிழக்கு வங்காளம், அஸ்ஸாம் தலைநகர் - டாக்கா
🌺 வங்கப் பிரிவினை திட்டத்தை உருவாக்கியவர் - வில்லியம் வார்
🌺 கூட்டுறவு சங்கங்கள் அறிமுகம் படுத்தப்பட்டன.
🌺 இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க பேரரசு இளைஞர் படை (Imperial Cadet Corps) நிறுவப்பட்டபோது.
🌺 1901 சர் கோலின் ஸ்கார்ட் மானெரிஃப் தலைமையில் பாசன கமிஷன் அமைக்கப்பட்டது.
🌺 சர் தாமஸ் ராபர்ட் சன் தலைமையில் இருப்பு பாதை சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது.
🌺 1904 பூசாவில் விவசாய ஆராய்ச்சி நிலையம் (Agricultural Research Institution) நிறுவப்பட்டது.
🌺 குற்றவியல் புலனாய்வு விசாரணை துறை (CID - Criminal Investigation Department) மற்றும் மத்திய குற்றவியல் தகவல் சேகரிக்கும் மனை (CIB - Central Intelligence Bureau) இவர் காலத்தில் அமைக்கப்பட்டது.
🌺 இந்திய திட்ட நேரம் (IST) அறிமுகப்படுத்தப்பட்டது.

*லேன்ஸ்டௌன் பிரபு (1888 - 1894) பற்றிய சில தகவல்கள்:-*

🌷 1891 இரண்டாவது தொழிற்சாலை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
🌷 பெண்கள், குழந்தைகள் வேலை நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
🌷 பிரிட்டிஷ் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லைக்கோடு நிர்ணயிக்க துரந்த் குழு (Durand Commission) நியமிக்கப்பட்டது.
🌷 1892 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
🌷 சிவில் பணியானது கீழ் கண்ட வாறு பிரிக்கப்பட்டது:-
1. மத்திய அரசு பணி (Imperial)
2. மாகாண பணி (Provincial)
3. சார்நிலைப்பணி (Subordinate)

*ரிப்பன் பிரபு (1880 - 1884) பற்றிய சில தகவல்கள்:-*

🌹இவர் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள்:-
1. தலசுயாட்சி - 1882
2. ஹன்டர் கல்விகுழு - 1882
3. முதல் தொழிற்சாலை சட்டம் - 1881
4. முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு - 1881
5. இல்பர்ட் மசோதா - 1883
🌹தலசுயாட்சி (பஞ்சாயத்து முறை) சட்டம் 1882 நிறைவேற்றப்பட்டது.
🌹 1882 ஹன்டர் கல்வி குழு தொடங்கப்பட்டது.
🌹 இது தொடக்க கல்வி மேம்படுத்த அறிவுறுத்தியது.
🌹 1881 தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்டது.
🌹 இது 7 வயது குழந்தைகளை தொழிற்சாலைகளில் நியமிக்க தடை விதிக்கப்பட்டது.
🌹 1881 முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
🌹 ரிப்பன் பிரபு அறிவித்த வட்டார மொழி பத்திரிகை சட்டம் நீக்கப்பட்டது.
🌹 ஐரோப்பிய குற்றவாளிகள் இந்திய நீதிபதிகள் விசாரிக்க வகை செய்யப்பட்ட சட்டம் இல்பர்ட் மசோதா 1883, பின்னர் இம்மசோதா திரும்ப பெறப்பட்டது.
🌹 இல்பர்ட் மசோதா சர்ச்சை இந்திய தேசியம் வளர உதவியது.
🌹 இல்பர்ட் மசோதா நிகழ்வில் உடனடி நிகழ்வாக 1885 ல் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
🌹 இவர் பல பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்டதால் இவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அப்பன்) என்று இந்திய மக்களால் புகழப்பட்டார்.

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்  👁‍🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812  👁‍🗨  திருக்குறளின் ...