Friday, 17 January 2025

*Breaking ~ 8th Pay Commission For Central Govt Employees Approved By PM* / '8th Pay Commission to be implemented in 01.01.2026' / *8 வது ஊதிய குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்*

*BIG BREAKING*

*8 வது  ஊதிய குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்*

*Breaking ~ 8th Pay Commission For Central Govt Employees Approved By PM*

*Union Minister Ashwini Vaishnaw says, "Prime Minister has approved the 8th Central Pay Commission for all employees of Central Government..."*



*பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு*



மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு 2014-ல் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி செயல்படுத்தப்பட்டன. இந்த 7-வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2026-ல் முடிவடைய உள்ள நிலையில், 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8-வது ஊதியக் குழு பரிந்துரை வழங்கும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம், அகவிலைப்படி பெருமளவு அதிகரிக்கும்.

இந்தியாவில் 1947 முதல் இதுவரை 7 ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கான சம்பள கட்டமைப்புகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை தீர்மானிப்பதில் ஊதியக் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான அரசு நிறுவனங்கள் ஊதியக் குழுவின் பரிந்துரை


*🟣 மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்*

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்வதற்கான (உயர்த்துவதற்கான) 8-வது ஊதியக்குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகளை திருத்தியமைக்க 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 8-வது சம்பளக் குழுவை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.' என்று தெரிவித்தார்.


மத்திய அரசு, தனது ஊழியர்களின் சம்பள அமைப்பை திருத்தியமைக்க ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஆணையத்தை அமைக்கிறது. சம்பள அமைப்பை திருத்துவதோடு மட்டுமல்லாமல், அவை ஓய்வூதிய கொடுப்பனவுகளையும் தீர்மானிக்கின்றன.

7-வது சம்பள ஆணையம் 2016 இல் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் 2026 இல் முடிவடையும் நிலையில், புதிய ஊதிய ஆணையம் அமைப்பதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

7வது ஊதியக் குழுவில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டன?: 

7வது ஊதியக் குழுவிற்கான சம்பள திருத்தம் வரும்போது ஊழியர் சங்கங்கள் 3.68 ஃபிட்மென்ட் காரணியைக் கோரின. ஆனால் அரசாங்கம் 2.57 ஃபிட்மென்ட் காரணியை முடிவு செய்தது. ஃபிட்மென்ட் காரணி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முறை ஆகும்.

இதன் விளைவாக குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 6வது ஊதியக் குழுவில் ரூ.7,000 ஆக இருந்தது, இது மாதத்திற்கு ரூ.18,000 ஆக மாறியது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.3,500 லிருந்து ரூ 9,000 ஆக உயர்ந்தது. 

அதிகபட்ச சம்பளம் ரூ. 2,50,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகவும் மாறியது.

Thursday, 16 January 2025

'No' in English how? / ஆங்கிலத்தில் Number என்றச் சொல்லை No. என்று சுருக்கமாக எழுதுகிறோமே, அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

ஆங்கிலத்தில் Number என்றச் சொல்லை No. என்று சுருக்கமாக எழுதுகிறோமே, அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?






இன்று பலரும் நம்பர் என்றச் சொல்லை சுருக்கமாக No. என்று எழுதுகிறார்கள். அதிலும் குறிப்பாக, டேபிள், வரிசை எண் போன்றவற்றில், இந்த சுருக்க எழுத்தை பயன்படுத்துகிறோம்.

மொபைல் நம்பர் என்பதை விசிட்டிங் கார்டு, ஐடி கார்டுகளில் கூட, சுருக்கமாக Mob.No. என்று போட்டிருப்பதை பார்த்திருக்கிறோம்.

இப்படியாக Number என்பதை No. என்று எழுதிகிறோமே, ஓ ‘o’ என்ற எழுத்து number என்பதில் இல்லவே இல்லை, பிறகு எப்படி சுருக்கச் சொல்லாக பயன்படுத்துகிறோம் என்று நீங்கள் என்றைக்காவது எண்ணியதுண்டா. இதே அதற்கான பதில்,

நம்பர் (Number) என்றச் சொல்லானது, லத்தீன் மொழியில் நியூமரோ (Numero) என்பதிலிருந்து வந்தது. Numero என்ற வார்த்தையின், முதல் எழுத்தும், கடைசி எழுத்துமே No என்றாகி, நம்பர் என்பதை சுருக்கமாக No. என்று எழுதுகிறோம்...🔴🟢

Sunday, 12 January 2025

Navagraha Temples Details / நவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது தெரியுமா?

நவகிரக பரிகார கோயில்கள் 
எப்படி வழிபடுவது தெரியுமா?






1.சூரியன்;
சூரியனார் கோவில்;
இங்கு வந்து முதலில் நவக்கிரகங்களுக்கு அருள் புரிந்த திருமங்கலங்குடி ஸ்ரீ பிராண நாதேஸ்வரரை வழிபட்டு பின்பு சூரியனார் கோவில் சென்று கருவறையில் சூரிய சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சூரியனை வழிபடுவதாலும் இங்குள்ள நவக்கிரகங்கள் வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறுவர். ஞாயிறு வழிபாடு சிறப்பு.
வழித் தடம்;
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருவலஞ்சுழி;
தஞ்சாவூர் அருகிலுள்ள திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீஸ்வரர் கோவிலில் சூரியன், சனி ஆகிய இரண்டு கிரகங்களும் நேருக்கு நேர் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இருவரும் நட்பு நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள் சூரியன் மற்றும் சனி பகவானால் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோவில் சென்று அர்ச்சனை செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
சூரக்குடி;
சூரியனுக்கு சாபம் நீக்கி அருள் தந்த சுந்தரேசர் சன்னதி. சூரிய, சனி தோஷங்களை நீக்கும் ஸ்தலம்.
வழித் தடம்;
குன்றக்குடி கிழக்கே 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

2. சந்திரன்;
திங்களுர்;
தாய்க்குப்பீடை நோய், மன நிலை பாதிப்பு, சந்திரன் ஜாதகத்தில் நீசம், மறைவு, பாப கிரக சேர்க்கை உள்ளவர் இங்குள்ள கைலாச நாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோச நிவர்த்தியாகும்.
வழித் தடம்
; கும்பகோணம்- திருவையாறு சாலையில் உள்ளது.

3.செவ்வாய்;
வைத்தீஸ்வரன் கோவில்;
ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு, திருமணத்தடை, தொழில் சிக்கல், வீடு, மனை வாங்க, அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும், செவ்வாய் தெசை நடைபெறும் காலங்களிலும் இங்கு தனி சன்னதியில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்ரி தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோசமும் நீங்கும்
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது
பழநி- திருவாவின்குடி;
செவ்வாய்க்கிழமை மதியம் உச்சிகால பூஜையில் முருகனுக்குப் பால் அபிசேகம் செய்து வழிபட தோசம் நீங்கும்.
வழித் தடம்;
திண்டுக்கல்லிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்திலுள்ள பழனியில் அடிவாரத்திலுள்ள கோவில்.

4. புதன்;
திருவெண்காடு; குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை, தடங்கல்கள் ஏற்படும் போது இங்குள்ள புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதா ரண்யேஸ்வரரையும் தரிசித்து பின்பு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டால் தோசங்கள் நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையிலுள்ளது.

5.குரு; ஆலங்குடி; திருமணத்தடை, புத்ர தோஷம், குடும்ப ஒற்றுமை நிம்மதி குறைவு, ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர் வியாழக்கிழமை இங்குள்ள குரு பகவானை நெய் தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
வழித் தடம்;
கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் உள்ளது.
தென்குடி திட்டை; அருள் மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் அருள் பாலித்து வருகிறார். எனவே, இத்தலமே குரு பரிகாரம் செய்வதற்கு சிறந்த தலம் என்பது பெரியோர் கருத்து.
வழித் தடம்;
தஞ்சாவூர்- திருக்காவூர் சாலையில் பள்ளி அக்ஹாரம் வழியாக மெலட்டூர் செல்லும் பாதையில் உள்ளது.
தாருகாபுரம்;
இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பாதத்தில் சுற்றிலும் ஒன்பது நவகிரகங்கள் உள்ளன. இவரை வழிபட்டால் குரு எந்த ராசிக்கு மாறினாலும் நற்பலன் கிடைக்கும்.
வழித் தடம்;
ராஜபாளையம் அருகிலுள்ள வாசுதேவ- நல்லூரிலிருந்து பேருந்து வசதி உண்டு.

6. சுக்கிரன்;
கஞ்சனூர்;
சுக்கிர தோஷம், பலஹீன, உள்ளவர் இங்குள்ள மூலவர் சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக் கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும்.
வழித் தடம்
சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ளது.
திருநாவலூர்;
இங்குள்ள பார்கவீஸ்வரரை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். சுக்கிர தெசை பாதிப்புக்கும் உரிய ஸ்தலம்.
வழித் தடம்;
விழுப்புரம்- உளுந்தூர் பேட்டை சாலையில் உள்ளது.

7. சனி
திருநள்ளாறு;
ஜாதகப்படி 7 1\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம் சனி ஏற்படும் காலங்களில் இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும் போக மார்த்த அம்மனையும் வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட தோசம் நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலுள்ளது.
குச்சனூர்;
7 1\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம சனி , கண்டச்சனி ஆரம்பிக்கும் பொழுது இங்கு சுயம்புவாய் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி பகவானின் பிரம்ம ஹாத்தி தோசம் நீங்கிய ஸ்தலம்.

வழித் தடம்;
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ளது.
சேந்தமங்கலம்;
சனி நடைபெறும் காலங்களிலும்சனி தெசை, சனி புத்தி நடைபெறும் காலங்களிலும் இங்குள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள சனீஸ்வரரை சனிக்கிழமை வழிபட வேண்டும்.
வழித் தடம்;
சேலம், நாமக்கல் அருகில் கொல்லிமலை செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருவாதவூர்;
சனி பாதிப்புள்ள்வர் இங்குள்ள சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபட வேண்டும். சனி, ஈஸ்வரனைப் பிடிக்க முயன்ரு, கால் முடமாகி, கால் சரியாக ஈஸ்வரனை நோக்கி தவமிருந்த இடம்.
வழித் தடம்;
மதுரை மேலூர் சாலையில் உள்ளது.
ஸ்ரீ வை குண்டம்;
மனிதனின் மன நிம்மதியை நிர்ணயிப்பவர் சனி பகவான். அவரவர் செய்யும் வினையைப் பொறுத்து நல்லதயும் கெட்ட்தையும் தருவார். சனிபகவானின் அம்சத்துடன் சிவ பெருமான் இத்தலத்தில் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் சனி திசையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்தால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும், இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம்.
திருநல்லாறு சனீஸ்வரன் திருக்கோவிலுக்கு ஈடானது இக்கோவில்
வழித் தடம்;
திரு நெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
திருநாரையூர்;
சனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி. ஜேஷ்டா தேவி ஆகியோருடன் இவ்வாலயத்தில் அருள் பாலிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடி மரம் இங்கே சனீஸ்வரருக்கு உண்டு. பலிபீடமும், காகவாகனமும் கொண்ட்து சனீஸ்வரரின் தனிச்சிறப்பு.
தம்பதி சமேதராய் மட்டுமல்ல, இவ்வாலயத்தில் சனீஸ்வரர் தனது இரு மகன்களுடன் [குளிகன், மாந்தி] குடும்ப சமேதராய் அருள் புரிகிறார்.
வழித் தடம்;
கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்கு பக்கத்தில் திருநாரையூர் உள்ளது.

8. ராகு
திருநாகேஸ்வரம்;
ராகுவினால் ஏற்படும் அனைத்து தோசங்களினால் திருமணத்தடை, பத்ர தோசம், மாங்கல்ய தோசம் ஏற்படும். இங்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி, ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுவிற்கு பாலாபிசேகம், அர்ச்சனை செய்து வழிபட நாக தோசம் நீங்கும்.
வழித் தடம்;
கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ பெரும் புதூர்;
ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ மத் ராமானுஜர் எழுந்தருளியுள்ள இத்தலம் சென்று நெய் தீபம் ஏற்றி, ஸ்ரீ மத் ராமானுஜரையும், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் ஸ்ரீ யதிராஜ நாதவல்லித் தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் வழிபட நாக தோசம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் பரிகார தோசம்.
வழித் தடம்;
செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது.
கதிராமங்கலம்;
இங்குள்ள வன துர்க்கை முன் பக்கம் பார்ப்பதற்கு பென் உருவமாகவும் பின்பக்கம் பார்ப்பதற்கு நாகம் படம் எடுத்த்து போன்றும் தோன்றும். கம்பர் வழிபட்ட ஸ்தலம். ராகு, கேது தோசம், கால சர்ப்ப தோசம் உள்ளவர் துர்க்கைக்கு அபிசேகம் செய்து வழிபட கிரக தோசம் நீங்கும். இத்துர்க்கை ல்லித சகஸ்ர நாமத்தில் வரும் வித்யா வன துர்க்கையாகும்.
வழித் தடம்;
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 3 கி.மீ. தூரம்

9.கேது;

திருக்காளத்தி;
பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம். கண்ணப்பனுக்கு காட்சி தந்த ஸ்தலம். இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ரா பிசேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும். கால சர்ப்ப தோச பரிகார ஸ்தலம்.

வழித் தடம்;
திருப்பதிக்கும் சென்னைக்கும் நடுவில் உள்ள

கீழ்ப்பெரும் பள்ளம்;
இங்குள்ள நாகநாத சாமி கோவிலில் தனி சன்னதியில் உள்ள கேதுவை வழிபட கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் பூம்புகாரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ளது.

Periyar/யாரிந்த பெரியார்/ஏன் எங்களுக்கு தந்தை ஆனார்

யாரிந்த பெரியார்?
ஏன் எங்களுக்கு தந்தை ஆனார்???
~~~~~~,~~~~~~~~~~~~~~~~~~

♦ பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி

♦ நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி

♦ பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி

♦ பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

♦ நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி

♦ பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

♦ பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி

♦ சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி

♦ பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி

♦ பெரியார் நினைவு நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்

♦ பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

♦ பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, செயங்கொண்டம்

♦ பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர், வெட்டிக்காடு

♦ பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

♦ பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

♦ பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

♦ பெரியார் மருத்துவமனை குடும்பநல மய்யம் பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

♦ பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்புக் கல்வியகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

♦ பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

♦ பெரியார் பால்பண்ணை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

♦ பெரியார் கணினி மய்யம், திருச்சி

♦ பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி

♦ பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி

♦ பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை

♦ பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை

♦ பெரியார் அருங்காட்சியகம், சென்னை

♦ பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, சென்னை

♦ பெரியர் நகர குடும்பநல மய்யம், சென்னை

♦ பெரியார் நகர நலவாழ்வு நிலையம், சென்னை

♦ பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், சென்னை

♦ இளைஞர் வழிகாட்டும் மய்யம், சென்னை

♦ பெரியார் கல்வியகம், சென்னை

♦ பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், சென்னை

♦ பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை

♦ பெரியார் கணினி ஆய்வுக் கல்வியகம், சென்னை

♦ பெரியார் பயிற்சி மய்யம், சென்னை

♦ பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை

♦ பெரியார் இலவச மருத்துவமனை, சோழங்கநல்லூர்

♦ பெரியார் மருத்துவமனை- குடும்பநல மய்யம், சோழங்க நல்லூர்

♦ டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

♦ பெரியார் மகளிர் மேம்பாடு - மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை

♦ பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை

♦ பெரியார் மய்யம், புதுதில்லி

இப்படியாக இத்தனை கல்வி நிறுவனங்கள், மருத்துவமணைகள், குறிப்பாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பெண்களுக்கு இலவச கல்வி தரும் நிறுவனங்கள் என பலவற்றையும் நிறுவியது  தந்தை பெரியாரும் அவர் கண்ட இயக்கமும் தான்.

பெரியாரை வசைபாடும் யாராக இருந்தாலும், இந்த மாநிலத்து மக்களுக்கு. குறிப்பாக பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு இதில் 10 சதவிகிதமேனும் பணியாற்றியிருக்கிறார்களா என்று தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளட்டும்.

🖤🖤🖤

Friday, 8 November 2024

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்





இடைநிலை ஆசிரியர்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

*பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்*

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் *மற்ற அலுவலர்கள்* தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

Sunday, 23 June 2024

*தமிழ்நாடு அரசு மின்சார துறை (EB) / TNEB Customer Care Number*. *94987 94987*அறிவிப்பு :-

*தமிழ்நாடு அரசு மின்சார துறை (EB) /  TNEB Customer Care Number*. *94987 94987*
அறிவிப்பு :-

உங்களது வீடுகளிலோ.. கடைகளிலோ.. இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும். அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும். அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....?

பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும்.. அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்...
அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்...

இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்...
 
தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் *9498794987* என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன புகாரோ அதை தெரிவித்தால் போதும்...

தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்...

அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும். அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள்... 

இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம்... இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை...

இது போன்று எளிதாக காரியத்தை சாதிக்க உங்கள் நெருங்கிய வட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கூட இது போன்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில்லை...

மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : *TN EB CUSTOMER CARE : 9498794987*

Tuesday, 7 May 2024

*முள்ளும் மலரும்...*(அப்பவே அப்படி ஒரு கதை)

*முள்ளும் மலரும்...*
(அப்பவே அப்படி ஒரு கதை) 





நாவலைப் படமாக்குகிற ரசாயன வித்தை, முள்ளின்மேல் நடப்பது போன்றது. அதைப் பூவில் நடப்பதுபோல், மாற்றி, ‘ப்பூ...’ என ஊதித் தள்ளியவர் இயக்குநர் மகேந்திரன். 1978-ஆம் வருடம் வெளிவந்தது இவரின் முதல் படமான முள்ளும் மலரும்.

‘நீ நடிச்சதுலயே உனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச படம் எது?’ என்று குருநாதர் கே.பாலசந்தர் கேட்க, ஒருநிமிடம் கூட யோசிக்காமல், தயங்காமல், சபை நாகரீகமென்பதையெல்லாம் பார்க்காமல், தனக்கே உரிய வேகத்துடன் ஸ்டைலாகச் சொன்னார் ரஜினி... ‘முள்ளும் மலரும்’ என்று.!

முள்ளும் மலரும். அதாவது முள், மலர் என இரண்டு குணங்கள் கொண்டது என்றும் சொல்லலாம். முள்ளும் (முள்கூட) மலரும்.... அதாவது முள்ளானது ஒருகட்டதில் மலர்ந்து விடுகிறது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

உமாசந்திரன் எவ்வளவு கதைகள் எழுதியிருக்கிறார் என்று நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால், முள்ளும் மலரும் கதையை நாவலாக எழுதி, அது சினிமாவாகவும் எடுக்கப்பட்டதில், அவரின் பெயரும் எழுத்து உள்ளவரையும் இருக்கும்; சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது உறுதி.

அவள் அப்படித்தான், ஆயிரம் ஜென்மங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, இறைவன் கொடுத்த வரம், என் கேள்விக்கு என்ன பதில், சங்கர் சலீம் சைமன், சதுரங்கம், தப்புத்தாளங்கள், தாய்மீது சத்தியம், ப்ரியா, பைரவி, மாங்குடி மைனர், வணக்கத்துக்குரிய காதலியே, ஜஸ்டிஸ் கோபிநாத்... போதாக்குறைக்கு இன்ஸ்பெக்டர் ரஜினி, ரவுடி ரஜினி என்று மொழிமாற்றுப் படங்கள் என வரிசையாய் அந்த வருடம் ரஜினிக்கு ஏகப்பட்ட படங்கள் வந்தாலும், மகேந்திரனின் முள்ளும் மலரும்... ரஜினியின் கிரீடத்தில், அழகிய இறகென சிறகாய் உட்கார்ந்து கொண்டது.

மகேந்திரன் யதார்த்த மனிதர்களின் நாயகன். அதனால்தான் அத்தனை யதார்த்தமான காளி கதாபாத்திரத்தின் இயல்பு கெடாமல் ரஜினியைத் தேர்வு செய்து, மிகச்சிறப்பாக நடிக்கவும் வைத்திருப்பார்.

மைசூர் பக்கம் உள்ள அந்த லொகேஷனையும் நம்மூர் கோபம்,  ஈகோ, பாச அன்புகளையும் மிக்ஸியில் போட்ட திரைக்கதையாய்த் தந்திருப்பதில் இருக்கிறது, மகேந்திரனுக்கும் அந்த நாவலுக்குமான பிணைப்பு. காளி நல்லவன்தான். ஆனால் அவனின் செயல்களைத் தள்ளிநின்றுப் பார்ப்பவர்களுக்கு, கெட்டவனாகத்தான் தெரிவான். சாதாரணமாய்ச் செய்யும் நல்ல கெட்ட விஷயங்கள் எல்லாமே அதிகாரி சரத்பாபுவுக்கு, அவ்வளவு நல்லதாகப்படவில்லை. முட்டிக்கொண்டே இருக்கிறார்கள் இருவரும்.

அங்கே, காளியும் அவனின் தங்கை வள்ளி ஷோபாவும் அப்படியொரு ஒட்டுதலுடன் இருக்கிறார்கள். ஷோபாவின் பார்வையும், அந்த வெள்ளந்திக் குரலும், சிலசமயங்களில் பேசுகிற பெரியமனுஷித் தனமும் தடக்கென்று மன சோபாவில் கம்பீரமாக ஷோபாவை உட்கார வைத்து விடுகின்றன.

படாபட் ஜெயலட்சுமி நடித்த படங்களை எப்போது பார்த்தாலும், ‘பாவி மக, இப்படி அநியாயமா சாவைத் தேர்ந்தெடுத்துப் போய்ச் சேர்ந்துட்டாளே’ என்று துக்கம் தொண்டையை அடைக்கும். அப்படியொரு நிறைவான நடிகை அவர். இங்கே, காளி, வள்ளி கதாபாத்திர ராஜாங்கத்திற்கு மத்தியிலும் தன் முத்திரையை ஆங்காங்கே, பூ தூவுவது மாதிரி தூவிச் சென்றிருப்பார். ’நித்தம் நித்தம் நெல்லுச் சோறு’ பாட்டுக்கு அவரின் ரியாக்‌ஷன் ஒவ்வொன்றும் கல்யாண சமையல் சாதம்.

மளிகைக் கடை வெண்ணிற ஆடை மூர்த்தியின் கள்ள உறவு, சாமிக்கண்ணுவின் அப்பாவித்தனம், சரத்பாபுவின் நேர்மை, அந்த மலையும் மேடுபள்ளங்களும் செடிகொடிகளும் என மிகக்குறைந்த கதாபாத்திரங்கள்தான். இவை அத்தனைக்கும் கனம் சேர்ப்பதாகவும் இலகுவாக்குவதாகவும் மென்மை கூட்டுவதாகவும் மனங்களை நம் கண்ணுக்கெதிரே காது வழியே காட்டுவதற்காகவும் என மிகப்பெரிய பங்கைச் செலுத்தியிருக்கிறார் இளையராஜா. பாலுமகேந்திராவின் கண்களும் கேமிராவும் உள்ளதை உள்ளபடியே காட்டி, இன்னும் அழகூட்டியிருக்கும்.

’கெட்டபய சார் காளி... ரெண்டு காலு ரெண்டு கையி இல்லாட்டியும்கூட பொழச்சுக்குவான்’ என்பது படம் ரீலிசான சமயத்தில் பஞ்ச் வசனமாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் படம் வெளியாகி, 45 வருடங்களான நிலையில், இன்றைக்கு இந்த வசனத்தைச் சொல்லாதவர்களே இல்லை.

ரஜினி - ஷோபாவின் உருக்கமான, மனதுக்கு நெருக்கமான தருணங்களிலெல்லாம், பின்னணியில் ஓர் இசையை, கழைக்கூத்தாடிகளின் இசையை, நிரவி, ஓடவிட்டு, நம்மை என்னவோ செய்துவிடுவார் இளையராஜா. ‘அடிப்பெண்ணே...’ பாட்டில் நம்மையும் துள்ளவைப்பார். ஓடவைப்பார். ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ பாட்டில், அந்தக் கூட்டத்தில் நம்மையும் நிற்க வைத்து, ‘போடா பாத்துக்கலாம்’ என்று உறுதியைத் தந்திருப்பார். ‘செந்தாழம்பூவில்...’ பாட்டில், சரத்பாபு, ஷோபா மற்றும் தோழிகளுடன் அந்த ஜீப்பில், நாமும் தொற்றிக் கொண்டு பயணிக்கச் செய்திருப்பார் (இன்றும் நிறைய செல்போன்களின் காலர் டியூன் இதுதான்). செம பசியுடன் வயிறாரச் சாப்பிட்டுவிட்டு, கையலம்பி, வெற்றிலைப் பாக்குப் போட்டுக்கொண்டு, ஏப்பம் விட்டபடி தொப்பையைத் தடவுபவர்களுக்குக்கூட, ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு’ பாடல் மூலமாக, மீண்டும் பசியை ஏற்படுத்திவிடுவார். அதுதான் இளையராஜா.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். மகேந்திரனுக்கு முதல் சோறு பதம் இது. அடுத்த சோறு பதம்... உதிரிப்பூக்கள்.

ஒரே ஊர், ஒரே தெரு, ஒரே டீக்கடை, நான்கைந்து பேர், பாலுமகேந்திரா, இளையராஜா, ரஜினி, ஷோபா... மகேந்திரன் எனும் படைப்பாளிக்கு இவையே போதுமானது! என்னை மீறி என் தங்கச்சி, என்னை விட்டுட்டு வரமாட்டா. வரலை. இதுபோதும் எனக்கு. ’இப்பக் கூட உங்களை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. நானே சொல்றேன். என் தங்கச்சியை கட்டிக்கிட்டு, சந்தோஷமாப் போங்க. உங்களை இப்பக்கூட பிடிக்கலை எனக்கு’ என கையை இழந்து, தன்மானத்தையும் பாசத்தையும் இழக்காத காளி நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் சொல்ல... தியேட்டரே கைத்தட்டும். மனசே அன்பில் அடைத்துக்கொள்ளும். அந்த அன்பின் இழைதான்... முள்ளும் மலரும் இன்னும் நமக்குள் படர்ந்திருக்கிற கொடி!

நாவலை அதன் தரம் குறையாமல் திரைப்படமாக்குவதில் மகேந்திரன் கை தேர்ந்தவர். ஆம். உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' நாவல்தான்..  மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' சினிமா. அதேபோல, புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' நாவல்தான்... மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' சினிமா.

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்  👁‍🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812  👁‍🗨  திருக்குறளின் ...