Saturday, 17 January 2026

மெட்ராசை சுற்றிப்பார்க்க ரூ.50/- மட்டுமே / Chennai Central to Pallavan House Rs.50/- Only

மெட்ராசை சுற்றிப்பார்க்க 

ரூபாய் 50 மட்டுமே 
எங்கு வேண்டுமானாலும் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம்


Bus / பேருந்து 


சுற்றி பார்க்கும் இடங்கள் 




வழித்தடங்கள் 




திறமை முக்கியமா? தொடர் முயற்சி முக்கியமா? - தேர்வில் வெற்றிபெற கூறும் வழிமுறை! / How to Success in Exams / Tips to Success in Exams

திறமை முக்கியமா? தொடர் முயற்சி முக்கியமா? - தேர்வில் வெற்றிபெற சைமன் ஆட்சியர் கல்வி கூறும் வழிமுறை!

பல நேரங்களில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் நினைப்பது ஒன்றுதான்: "எனக்கு அவரைப் போல அதிக நினைவாற்றல் இல்லை, நான் பள்ளியில் முதல் மாணவன் இல்லை, என்னால் எப்படி இந்தத் தேர்வில் வெற்றிபெற முடியும்?"


வெற்றி என்பது அதீத திறமைசாலிகளுக்குச் சொந்தமானது அல்ல; அது விடாமுயற்சி (Consistency) உடையவர்களுக்கே சொந்தமானது.

விடா முயற்சியை மையக்கருவாக கொண்டு உங்கள் தேர்வு தயாரிப்பை எப்படி மாற்றியமைப்பது என்பதை இங்கே காண்போம்.

1. ஊக்கம் (Motivation) vs ஒழுக்கம் (Discipline)

தேர்வுக்குப் படிக்கத் தொடங்கும் முதல் வாரத்தில் இருக்கும் வேகம், இரண்டு வாரங்களுக்குப் பிறகு இருப்பதில்லை. ஏன்?


 * மோட்டிவேஷன் (Motivation): இது ஒரு தீக்குச்சி போன்றது. சட்டென்று பற்றிக்கொள்ளும், ஆனால் சீக்கிரமே அணைந்துவிடும். இதை மட்டும் நம்பி தேர்வுக்குப் படிக்க முடியாது.

 * டிசிப்ளின் (Discipline): இதுதான் உண்மையான சாவிக். உங்களுக்குப் படிக்கப் பிடிக்காத நாட்களிலும், சோர்வாக இருக்கும் நாட்களிலும் உங்களைப் புத்தகத்தை எடுக்க வைப்பது இந்த ஒழுக்கம்தான்.
> தேர்வுக்கான பாடம்: தினமும் காலையில் எழும்போது படிக்கும் மனநிலை (Mood) இருக்காது. ஆனால், மனநிலையைத் தாண்டி கடமையைச் செய்வதுதான் வெற்றியாளரின் அடையாளம்.
2. சிறு துளி பெரு வெள்ளம் (Small Actions, Big Results)
ஒரே நாளில் 1000 செங்கற்களை வைத்து சுவர் கட்ட முடியாது. ஆனால் தினமும் ஒரு செங்கல்லை சரியாக வைத்தால், ஒரு கட்டத்தில் பிரம்மாண்டமான சுவர் உருவாகும்.

 * பாறையின் மீது விழும் ஒரு சொட்டு நீர் மென்மையானதுதான். ஆனால் அது தொடர்ந்து விழுந்துகொண்டே இருந்தால், அந்தப் பாறையையே பிளந்துவிடும்.

> தேர்வுக்கான பாடம்: தேர்வுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன என்று நினைக்காதீர்கள். தினமும் 1 மணி நேரம் படிக்கும் ‘Current Affairs’ அல்லது தினமும் மனப்பாடம் செய்யும் 10 திருக்குறள்கள் தான் உங்களை வெற்றியடையச் செய்யும். ஒரே நாளில் மொத்த சிலபஸையும் படித்துவிட முடியாது.


3. 21 நாட்கள் விதி (The 21-Day Rule)
எந்த ஒரு புதிய பழக்கத்தையும் உருவாக்க சராசரியாக 21 நாட்கள் ஆகும் என்று அறிவியல் கூறுகிறது.

 * முதல் சில வாரங்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து படிப்பது மிகக் கடினமாக இருக்கும். உடல் ஒத்துழைக்காது. ஆனால், 21 நாட்கள் தொடர்ந்து செய்துவிட்டால், 23-வது நாள் அலாரம் இல்லாமலே உங்கள் கண்கள் விழித்துவிடும்.


> தேர்வுக்கான பாடம்: ஆரம்பத்தில் ஏற்படும் சிரமத்தைப் பார்த்து விட்டுவிடாதீர்கள். அது தற்காலிகமானது. பழக்கமாக மாறும் வரை பொறுமையாக இருங்கள்.
4. சலிப்பை நேசியுங்கள் (Embrace the Boredom)

வெற்றி என்பது எப்போதும் சுவாரஸ்யமானது அல்ல. அது பல நேரங்களில் சலிப்பானது (Boring).
 * ஒரே பாடத்தை திரும்பத் திரும்பப் படிப்பது (Revision), பழைய வினாத்தாள்களைத் திரும்பப் பார்ப்பது போன்றவை சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த "சலிப்பான" விஷயங்களை யார் தொடர்ந்து செய்கிறார்களோ, அவர்களே தேர்வில் சாதிக்கிறார்கள்.


 * உடனடித் திருப்தியை (Instant Gratification) எதிர்பார்ப்பவர்கள் தோல்வியடைகிறார்கள்.

> தேர்வுக்கான பாடம்: புதிது புதிதாகப் படிப்பதை விட, படித்ததையே திரும்பத் திரும்பப் படிப்பது (Revision) கடினமானது. அந்தச் சலிப்பைத் தாண்டிச் செல்பவனே வெற்றியாளன்.
5. உங்களை நீங்களே நம்புங்கள் (Build Self-Trust)

நம்பிக்கை என்பது வாக்குகளைக் காப்பாற்றுவதில் இருந்து வருகிறது.


 * "நாளை காலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன்" என்று உங்களுக்கு நீங்களே வாக்குறுதி கொடுத்துவிட்டு, எழவில்லை என்றால், உங்கள் ஆழ்மனதில் உங்கள் மீதான நம்பிக்கை குறையும்.
 * சிறிய வாக்குறுதிகளைக் கொடுத்து, அதை நிறைவேற்றுங்கள். இதுவே உங்களை தன்னம்பிக்கை கொண்டவராக மாற்றும்.
முடிவுரை
அரசுத் தேர்வில் வெற்றி பெற நீங்கள் அதிபுத்திசாலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நீங்கள் விட்டுவிடாதவராக (One who never quits) இருக்க வேண்டும். திறமை உங்களைச் சில தூரம் அழைத்துச் செல்லும்; ஆனால் தொடர் முயற்சி (Consistency) மட்டுமே உங்களை வெற்றியின் இறுதி எல்லைக்குக் கொண்டு செல்லும்.

ஆட்சியர் கல்வி 


Wednesday, 10 December 2025

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும் / Thairoid - Sugar

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும்...

தேங்காய் பூ



தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.

இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்

 சக்தி தரும் :

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ரை பண்ணிப் பாருங்களேன்.

ஜீரண சக்திக்கு :

உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது

சர்க்கரை வியாதிக்கு :

தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

 இதயம் :

இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

தைராய்டு :

நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

புற்று நோய் :

ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.

உடல் எடை :

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உட்ல எடை குறையும்.

சிறு நீரகம் :

சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.

 முதுமை :

தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது...
#fblifestyle #tamilfoods

புயல்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது? முடிவு செய்வது யார்? / How create a name for Storm

*புயல்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது? முடிவு செய்வது யார்?* — 

*1. பெயர் சூட்டும் நடைமுறை எப்போது தொடங்கியது?*

2004 முதல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை செயல்படுகிறது. இது உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஆசிய–பசிபிக் சமூக, பொருளாதார ஆணையம் இணைந்து அமைக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.

2. பெயர் சூட்டும் அதிகாரம் கொண்டவர்கள்

*உலகத்தில் உள்ள*:

6 பிராந்திய வானிலை மையங்கள் (RSMC)

5 புயல் எச்சரிக்கை மையங்கள்

இவை பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றவை.
இவைகளில் ஒன்றாக இந்தியாவின் டெல்லி RSMC (IMD) செயல்படுகிறது. இது:

வங்கக்கடல்

அரபிக் கடல்

இந்தியப் பெருங்கடல் வடக்கு பகுதி

புயல்களுக்கு பெயர் சூட்டுகிறது.

3. பெயர் பரிந்துரிக்கும் 13 நாடுகள்
1. வங்கதேசம்

2. இந்தியா

3. ஈரான்

4. மாலத்தீவு

5. மியன்மர்

6. ஓமான்

7. பாகிஸ்தான்

8. கத்தார்

9. சவுதி அரேபியா

10. இலங்கை

11. தாய்லாந்து

12. ஐ.அ. எமிரேட்ஸ்

13. ஏமன்

ஒவ்வொரு நாடும் 13 பெயர்கள் பரிந்துரைக்கும். அவை ஆங்கில அகரவரிசை முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

*4. ஏன் புயல்களுக்கு பெயர் வைக்கப்படுகிறது?*

ஒவ்வொரு புயலையும் தனியாக அடையாளம் காண

ஒரே நேரத்தில் உருவாகும் புயல்களில் குழப்பம் தவிர்க்க

எச்சரிக்கை தகவலை விரைவாக தெரிவிக்க

மக்கள் எளிதாக நினைவில் கொள்ள

5. பெயர் வைக்கும் விதிமுறைகள்

*அரசியல், மதம், இனத்தைக் குறிக்கும் பெயர்கள் கூடாது*

உணர்வுகளை புண்படுத்தக்கூடாது

கொடூரமான அர்த்தம் கொண்ட பெயர் இல்லை

எளிதாக உச்சரிக்கப்படக்கூடியது

8 எழுத்துகளில் குறுகியது

*ஒருமுறை பயன்படுத்திய பெயர் மீண்டும் பயன்படுத்த முடியாது.*

*6. அடுத்த புயல் பெயர்*

*'சென்யார்' புயலைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடலில் உருவாகும் அடுத்த புயலுக்கு “திட்வா (Ditwah)” என பெயர் சூட்டப்படும் (ஏமன் பரிந்துரை).*

7. பெயர் வேறுபாடுகள் — பிராந்திய அடிப்படையில்

இந்தியப் பெருங்கடல் – Cyclone (புயல்)

வடக்கு அட்லான்டிக்/பசிபிக் – Hurricane (சூறாவளி)

வடமேற்கு பசிபிக் – Typhoon (தாய்ஃபூன்)

புயல்களுக்கு பெயர் சூட்டுவது சர்வதேச ஒத்துழைப்புடன் நடைபெறும் முக்கிய செயல்முறை. இது புயல் எச்சரிக்கைகளை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளவும், பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.

Friday, 5 December 2025

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History

🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் அல்லது பள்ளிகொண்ட பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.




📜 தல வரலாறு (புராணக் கதை):
பிரம்மா யாகம் காத்தருளிய பெருமாள்: பிரம்மாண்ட புராணம் மற்றும் காஞ்சி மகாத்மியத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஒரு சமயம், பிரம்மா காஞ்சீபுரத்தில் யாகம் செய்ய விரும்பினார். அப்போது சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. பிரம்மா லட்சுமியே பெரியவள் என்று கூற, கோபம் கொண்ட சரஸ்வதி, அங்கிருந்து சென்று, பாலாற்றின் வழியே பெரும் வெள்ளமாகப் பாய்ந்து பிரம்மாவின் யாகத்தை அழிக்க முற்பட்டாள்.
பிரம்மா ஸ்ரீமன் நாராயணனிடம் தஞ்சம் புகுந்தார். பெருமாள் பிரம்மாவின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து, பள்ளிகொண்டா, திருப்பாற்கடல், காஞ்சீபுரம் ஆகிய மூன்று இடங்களில் பாலாற்றை வழிமறித்து வெள்ளத்தைத் தடுத்து, பிரம்மாவின் யாகத்தைக் காத்தருளினார்.
பள்ளிகொண்டாவில் சயனம் (பள்ளி கொண்ட) செய்த பெருமாள், "பள்ளிகொண்டான்" என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார். பெருமாள் பூமியில் முதன்முதலாகப் பள்ளிகொண்ட திருத்தலம் இது என்று சில குறிப்புகள் கூறுகின்றன.
இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலம்: தேவேந்திரன் (இந்திரன்) தான் இழைத்த அசம்பாவிதத்தால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, மரீசி புத்திரராகிய கச்சியப்ப முனிவரின் அறிவுரைப்படி, இங்குள்ள வியாசர் புஷ்கரணியில் நீராடி, ஓராண்டு காலம் சேத்திர வாசம் செய்து தோஷம் நீங்கப்பெற்றார்.
✨ சிறப்புகள்:
செண்பகவல்லி தாயார் திருக்கல்யாணம்: சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் மணம் புரிந்ததுபோல, இத்தலத்தில் சம்பாதிமுனிவர் விருப்பப்படி, செண்பகவல்லி என்ற பக்தையை பங்குனி உத்திர நாளன்று திருமால் மணம் புரிந்ததாகத் தல புராணம் கூறுகிறது.
திருமண வரம்: இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்றும், தடைப்படும் திருமணங்கள் சிறப்பாக நடைபெறும் என்றும் நம்பிக்கை உள்ளது. பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
மூலவர்: மூலவர் உத்திர ரங்கநாதர் ஆதிசேஷன் மீது சயனக் கோலத்தில் (பள்ளிகொண்ட நிலையில்) கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரின் திருமேனி சாலிக் கிராமக் கல்லினால் ஆனது என்பது ஒரு சிறப்பு.
கல்வெட்டுகள்: 1925-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை ஆய்வறிக்கையின்படி, இத்தலத்தில் 22 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மூன்றாம் நந்திவர்மன், முதலாம் பராந்தகன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் போன்ற மன்னர்களின் கொடைகளையும், நிலதானங்களையும் எடுத்துரைக்கிறது. இதனால் இக்கோயில் சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது என அறியப்படுகிறது.
இக்கோயில் தென் தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தைப் போல, வடதமிழகத்தின் புகழ்மிக்க ஆலயமாகத் திகழ்கிறது.

Thursday, 4 December 2025

மூக்கிரட்டை கீரை / சர்க்கரை நோய் / சிறுநீரக கற்கள் / கல்லீரல் கல் / இருதயத்தில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்

மூக்கிரட்டை கீரை / சர்க்கரை நோய் / சிறுநீரக கற்கள் / கல்லீரல் கல்  / இருதயத்தில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் 




மூக்கிரட்டை செடியின் வேரை கசாயம் வைத்து குடிக்கும் போது நுரையீரலில் உள்ள சளியை கரைத்து சுவாசத்தை ஒழுங்குபடுத்தும்.. கெட்ட நீர் முழுவதும் சிறுநீரில் வெளியேறும்... சிறுநீரகப்பை கல்லீரல் இருதயம் ஆகியவற்றில் சேர்ந்துள்ள கெட்ட நீரும் மலம் அல்லது சிறுநீரில் வெளியேறும்... இதன் இலைகளை மற்ற கீரைகள் உடன் கலந்து துவட்டலாக சேர்த்து சமைத்து சாப்பிடலாம் .. இதனால் சிறுநீர் தாராளமாக வெளியேறும் உடலில் உள்ள வாயுக்களும் நீங்கும்.

*சர்க்கரை நோயாளிகளுக்கு தீர்வு*


சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய் குணமாகும் 

Sunday, 30 November 2025

TNPSC GK

TNPSC GK / Tamil GK



பாளையக்காரர்கள் 


மெட்ராசை சுற்றிப்பார்க்க ரூ.50/- மட்டுமே / Chennai Central to Pallavan House Rs.50/- Only

மெட்ராசை சுற்றிப்பார்க்க  ரூபாய் 50 மட்டுமே  எங்கு வேண்டுமானாலும் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம் Bus / பேருந்து  சு...