Saturday, 4 September 2021

*Sep 1 - உலக கடிதம் எழுதும் தினம்*

*இன்று உலக கடிதம் எழுதும் தினம்*

*நலம் நலமறிய ஆவல்*


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. 


இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.


 இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே ஒரு பெரிய பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.


 பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது.

 இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும். 


உலகக் கடிதம் எழுதும் நாளை முன்னிட்டு நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு பேனா, பேப்பர் எடுங்கள். ஊரில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி, விருப்பத்திற்குரிய உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரில் யாருக்கேனும் ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள்.


 அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்களே உங்கள் கைப்பட எழுத முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History

🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...