Saturday, 26 May 2018

*லிட்டன் பிரபு (1876 - 1880) பற்றிய சில தகவல்கள்:-*

🌼 இவர் தலைகீழ் எண்ணமுடைய வைசிராய் ( Viceroy of Reverse Character) எனப்படுகிறார்.
🌼 இங்கிலாந்து ராணி விக்டோரியா விற்கு கெய்சர்-இ-ஹிந்த் (Kaiser-i-Hind) பட்டம் வழங்க 1877 ல் டெல்லி தர்பாரை நடத்தியவர்.
🌼 1878 படைக்கல சட்டம் என்ற ஆயுதச் சட்டம் (Arms Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1878 வட்டார மொழி பத்திரிகை சட்டம் (Vernacular Press Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1876 - 1878 இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
🌼 1878 - 1880 ல் பஞ்ச நிவாரண குழு சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் அமைக்கப்பட்டது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் (1878 - 1880) இவர் காலத்தில் நடைபெற்றது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - காண்டமக்
🌼 காபூலுக்கு வந்த தூதர் மற்றும் அதிகாரிகளை ஆப்கானியர்கள் படுகொலை செய்தனர். இதற்கு லிட்டன் பிரபு பொறுப்பு என அவரை 1880 பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
🌼 இந்தியாவின் 'நிரோ மன்னர்' என்று அழைக்கப்பட்டார்.
🌼 நிரோ மன்னர் என அழைக்க காரணம் ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் போது அந்த நாட்டு மன்னர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் அதே போல் இந்திய பஞ்சத்தில் இருந்த போது டில்லி தர்பார் நடத்தினார்.

No comments:

Post a Comment

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History

🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...