Wednesday, 25 January 2017

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஜனவரி 24 தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம்....

நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்த பாடல், இதே நாளில் 1911 ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா கூட்டத்தில் முதன் முறையாக பாடப்பட்டது .

இந்தியா சுதந்திரமடைந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 24, 1950 - ல், இப்பாடல் நம் நாட்டின் தேசிய கீதம் என இந்திய அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது.

தேசிய கீதம் சமஸ்கிருதம் மற்றும் பெங்காலி மொழிகளில் எழுதப்பட்டது, ஐந்து சரணங்கள் உள்ள இப்பாடலை பாடும் நேரம் 52 வினாடிகள் ஆகும்.

இந்த தேசிய கீத பாடலை 'இந்திய காலை பாடல்' என்று ஆங்கிலத்தில் தாகூர் மொழி பெயர்த்தார். இதற்க்கு, ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மடனபள்ளே என்ற நகரத்தில் தாகூரே இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் ஒலிக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியர்கள் அனைவரும் தன்னை அறியாமல் எழுந்து நிற்பதற்கு இப்பாடலின் மகத்துவமே சாட்சி.





ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்...

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள்  தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக  அனுசரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History

🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...